கொழும்பில் பதிவாகும் கொரோனா நோயாளர்களில் 20% முதல் 30 வீதமானவர்களுக்கு டெல்டா திரிபு தொற்றியிருக்கலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக நிபுணர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் குறித்து கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டெல்டா தொற்றானது வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களைப் போன்று நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பரவக் கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.