24 மணிநேர நீர் விநியோக தடை!

0

நாட்டின் பல பகங்களிலும் அத்தியாவசிய சீரமைப்பு பணிகள் காரணத்தால் 24 மணிநேர நீர் விநியோக தடை அமுலாக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய வத்தளை உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று முற்பகல் 10 மணி முதல் குறித்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வத்தளை -நீர்கொழும்பு வீதியின் ஒரு பகுதிக்கும், மாபோல பிரதேசத்தின் ஒரு பகுதிக்கும், வெலிகடமுள்ள, ஹந்தளை வீதி- நாயகந்த சாந்தி வரையான அனைத்து கிளை வீதிகளின் பகுதிகளிலும் இந்த நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

அவ்வாறு அள்விஸ் நகர், மருதானை வீதி, கலஹதுவ மற்றும் கெரவிலப் பிட்டியில் ஒரு பகுதியும் குறித்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply