இலங்கையை தாக்கும் மற்றுமொரு வைரஸ்!

0

நாட்டில் தற்போது டெங்கு நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இதற்கமைய இதுவரை காலமும் 10,155 பேர் இந்த டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்கள் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அதிகளவான நோயாளர்கள் (2975) மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பு மாவட்டத்தில் 2215 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 891 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 527 பேரும் இவ்வாறு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply