தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணத்தினால் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை- மக்களே அவதானம்!

0

நாட்டில் தற்போது தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணத்தினால் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் தற்போது நிலவும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணத்தினால் இன்று மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அத்துடன் சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறு வடமேல் மாகாணத்தில் சிறிய அளவிலான மழை பெய்யக்கூடும்.

மேலும் நாடு பூராகவும் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில்
ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

அத்துடன் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும், வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மன்னார், வவுனியா, கிளிநொச்சி, மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்க கூடிய சாத்தியம் காணப்படும்.

ஆகவேபொது மக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply