ஆலயத்திற்குள் மேலங்கிகளுடன் உள் நுழைந்த இராணுவத்தினர்-மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு!

0

யாழ் அச்சுவேலி பகுதியில் உள்ள உலவிக்குளம் பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினர் மேலங்கிகளுடன் சென்று வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கமைய குறித்த இராணுவத்தினர் வில்லு மண்டபம் வரை சென்றதாகவும் மற்றும் சுவாமி வீதி உலாவிற்காக சுவாமியை காவியதாகவும் குறிப்பிடப்படுள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் கொவிட் தொற்று காலகட்டத்தில் பக்தர்களை கூட உள் நுழைய விடாது நிலையில் இராணுவத்தினர் இவ்வாறு உள்ளே சென்றமை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலய பக்தர்கள் கூட வெளியில் நிற்க, இராணுவத்தினரின் இந்த செயற்பாடு அடியவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply