தொடர் மழையால் கீழே சாய்ந்து விழும் பூண்டு செடிகள்!

0

நீலகிரி மாவட்டத்தில் தற்போது சூறாவளி காற்றுடன் தொடர் மழை பெய்து வருகின்றது.

இதன் காரணத்தினால் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பூண்டு செடிகள் என்பன கீழே சாய்ந்த வண்ணம் உள்ளன.

இதனையடுத்து விவசாயிகள் பூண்டு,செடிகள் அழுகாமல் இருக்க முன்கூட்டியே அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன் இவ்வாறு கீழே சாய்ந்து கிடக்கும் செடிகளை தொழிலாளர்கள் பிடுங்கி வைக்கின்றனர்.

அவ்வாறு கீழே விழுந்த செடிகளை பூண்டு பிரிக்கப்படாமல் செடிகளோடு வரிசையாக அடுக்கி வைக்கப் படுகின்றது.

இதற்கமைய கடந்த ஆண்டு ஒரு கிலோ பூண்டு 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது..

ஆனால் தற்போது 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.

இதற்கிடையே அறுவடைக்கு தயாராகி வந்த பூண்டு செடிகள் மழையால் சாய்ந்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

அத்துடன் இந்த பூண்டு நெஜமாத்தான் செடிகள் அழுகி வருவதால் விரைவாக அறுவடை செய்து வருகின்றோம் என விவசாயிகள் குறிப்பிட்டனர்.

மேலும் அதனை தொடர்ச்சியாக மழை பெய்வதால் தர்ப்பாய் கொண்டு மூடிவைத்த பாதுகாத்து வருகிறோம்.

இருப்பினும் அவை அழுகி வருவதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என அவர்கள் கவலை தெரிவித்தனர்.

Leave a Reply