இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்!

0

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியின் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் அதிகரித்த மழை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய கூடிய சாத்தியம் உள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும். நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறு மேல் மாகாணத்திலும் கண்டி ,காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அளவான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் நாடுபூராகவும் மணித்தியாலயத்திற்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

மேலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலயத்திற்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்க கூடிய சந்தர்ப்பம் நிலவுகிறது.

எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply