இரு வேறு பகுதிகளில் போதைப் பொருள் வைத்திருந்த இரு நபர்கள் கைது.

0

ஒரு கோடியே 24 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப் பொருள் வைத்திருந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபர்களில் ஒருவர் நாரங்கல பகுதியில் வைத்து 8 350,000 ரூபாய் பெறுமதியான போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் 39 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 805 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 30 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

அவ்வாறு மற்றுமொறு நபர் அத்தியடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்த நபரிடமிருந்து,
4 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சம்பவத்தில் 32 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply