கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு செயற்பாடு!

0

ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் பொதுமக்களிடம் கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அழகு2 மாணவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு குழுக்களாக பிரிந்து இந்த கொரோனா தடுப்பு பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கமைய அதன் ஒரு பகுதியாக கணக்கம்பாளையம் கிராமத்தை தத்தெடுத்து உள்ளனர்.

அங்கு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடந்த தடுப்பூசி முகாமில் கொரோனா வைரஸ் போல வேடமணிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி தன்னார்வலராக பணியாற்றி வந்தனர்.

மேலும் குறித்த நிகழ்வில் தடுப்பபூசி செலுத்தி கொண்டவர்கள் மற்றவர்களையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுரை வழங்க வேண்டும் என்று கனகா பாளையம் ஊராட்சி ஒன்றியத் சண்முகசுந்தரம் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் இந்த செயற்பாட்டிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply