மிருகக்காட்சி சாலைளை மீள திறப்பது தொடர்பில் வெளியான தகவல்!

0

நாட்டில் அதிகரித்த கொவிட் 19 தொற்றுப் பரவல் காரணத்தினால் கடந்த மே மாதம் முதல் மிருகக்காட்சி சாலைகள் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் தெஹிவளை மிருகக்காட்சி சாலை மற்றும் ரிதியகம சபாரி பூங்கா ஆகியவற்றை மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.

இதற்கமைய குறித்த மிருகக்காட்சி சாலைகள் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.

மேலும் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் காட்சி சாலை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும் என்பதுடன் ரிதியகம சவாரி பூங்கா காலை 8.30மணி முதல் மாலை 5 மணிவரையில் திறக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply