மொடர்னா தடுப்பூசி தொடர்பில் போலியான தகவல்களை பரப்புபவர்கள் குறித்த விசாரணை ஆரம்பம்!

0

மொடர்னா தடுப்பூசி தொடர்பில் தற்போது சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பிரச்சாரப்படுத்துவதாக கண்டி வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்த விடயம் தொடர்பில் தற்போது விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதிக் காவற்துறைமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய குறித்த தடுப்பூசியானது உடலுக்கு தீங்கினை ஏற்படுத்துவதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பரப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply