சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஆடி மாத விசேஷ பூஜைகளுக்காக கடந்த 16 ஆம் திகதி திறக்கப்பட்டது.
இதற்கமைய குறித்த நடையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி திறந்து வைத்துள்ளார்.
அத்துடன் மறுநாள் முதல் வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை உட்பட்ட, பல சிறப்பு பூஜைகள் இடம்பெற்றது.
ஆடி மாத பூஜையின் நிறைவு நாளான நேற்றைய தினம் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் பிரசித்தி வாய்ந்த கலச பூஜை நடைபெற்றது.
குறித்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஐயப்பன் தரிசனம் செய்து வழிபட்டனர்.
அவ்வாறு தொடர்ச்சியாக ஐந்து நாட்களாக நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கோவில் நடை இரவு 9 மணிக்கு மூடப்பட்டுள்ளது.
ஆடிமாத பூஜையை ஒட்டி ஒன்லைன் மூலம் பதிவு செய்தவர்களின் அடிப்படையில் முதல் நாள் மாத்திரம் 5 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏனை நான்கு நாட்கள் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.