சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படுமா?

0

உலக சந்தையில் தற்போது எரிவாயு வின் விலை அதிகரித்த போதிலும் நாட்டில் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க மாட்டாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சமையல் எரிவாயுவின் விலை தொடர்பில் வர்த்தக அமைச்சில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொருளாதார நெருக்கடி காரணமாக உலக சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது.

இருப்பினும் இலங்கை அரசு அந்த சுமையை நுகர்வோர் மீது திணிக்காது என வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார் .
மேலும் நிதி அமைச்சுடன் இணைந்து சமையல் எரிவாயுவின் விலையை கட்டுப்படுத்துவதற்கு முறையான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

Leave a Reply