15 வயது சிறுமியின் மர்ம மரணம் – ரிசாத்தின் குடும்பம் கடும் சிக்கலில்

0

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதின் வீட்டில் பணி செய்த சிறுமி தீக்காயங்களுக்குள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

அந்த சிறுமியின் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பொரளை பொலிஸார், முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சிறுமி நீண்ட காலகமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் வெளியாகியுள்ளது.

நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணியாற்றியவர்களிடம் 6 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் ரிஷாத்டின் தாய் மற்றும் தந்தையிடம் நேற்றைய தினம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply