இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

0

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 29  ஆயிரத்து 424 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 11 இலட்சத்தை கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 3 இலட்சத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேநேரம் 4 இலட்சத்து 28 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் நேற்று ஒரேநாளில் 372 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 14 ஆயிரத்து 513 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply