இலங்கை மின்சார சபையையினரால் முன்வைக்கப்படுள்ள தகவல்!

0

இலங்கை மின்சார சபையை விற்பனை செய்வதற்கான நோக்கில் கெரவலபிட்டியிலுள்ள மின் உற்பத்தி மையத்தின் 40 சதவீத உரிமையை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்க தீர்மானிம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மற்றும் பல்வேறு விடயங்களை முன்வைத்து மின்சார சபையின் பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.

அத்துடன் குறித்த பேச்சுவார்த்தை இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெறவுள்ளது.

மேலும் இந்த பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்படும் தீர்மானத்திற்கு அமைய அடுத்தகட்ட தொழிற்சங்க நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply