சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பியோடிய 4 நாபர்களுக்கும் நேர்ந்த கதி!

0

தும்பளை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் 4 நபர்கள் நீதிமன்றில் அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்பட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும்போது தப்பியோடியு சென்றுள்ளனர்.

இருப்பினும் இவ்வாறு தப்பிச் சென்ற நான்கு நபர்களும் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த நான்கு நபர்களும் ரம்பொடகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறைச்சாலை பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டபோது அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இவர்களுள் இருவர் உடனடியாக பிடிபட்டுள்ளனர் என்பதுடன் மேலும் ஏனைய இருவரும் காவல்துறையின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply