ஜா எல- கொட்டுகொட பகுதியில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் வைத்திருந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு கிலோ 225 கிராம் ஹெரோயினும், 868,090 ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன் 29 வயதான ஆண் ஒருவரும்,26 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த போதைப்பொருள் வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் போதைப் பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கு சொந்தமானது என அவர் தெரிவித்துள்ளார்.