நாடு முழுவதும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

0

தற்போது நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய பல சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 3,139 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட காவற்துறை அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் துப்பாக்கியுடன் 11 பேரும் , பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 638 பேரும், போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 1,350 பேருமே இவ்வாறு
கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

மேலும் குறித்த சோதனை நடவடிக்கைகளுக்காக 15,292 காவற்துறை அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply