இன்று முதல்கண்டி மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி!

0

மக்களின் பாதுகாப்பு கருதி நாடுபூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கமைய கண்டி மாவட்டத்திலும் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமானது.

இந்நிலையில் பல்வேறு தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தெல்தோட்ட பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் வாழும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலஹா பிரதேச வைத்தியசாலையில் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

அத்துடன் கலஹா நில்லம்பே மகா வித்தியாலயத்திலும் குறித்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மேலும் கம்பளை ஜாதிக உறுமைய மத்திய மண்டபத்திலும் அதிகமாக நீண்ட வரிசையில் நின்று அரச உத்தியோகத்தர்களும் தடுப்பூசி பெற்றுக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply