நீர்ப் பாசன கால்வாயில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

0

கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்தில் நீர்ப் பாசன கால்வாயில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரணைமடு குளத்தின் விவசாய வயல் நிலங்களுக்கு நீர் திறந்துவிடப்படும் பிரதான வாய்க்காலில் பன்னங்கண்டி பகுதியிலுள்ள நீர்த் தடுப்பு ஏற்படும் துருசு பகுதியிலே குறித்த சடலம் காணப்பட்டது.

அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply