உயிரியல் பூங்காக்களை மீண்டும் திறப்பதற்கு தீர்மானம்!

0

தற்போதுநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணத்தினால் தெஹிவளை மிருகக்காட்சி சாலைகள் உட்பட உயிரியல் பூங்காக்கள் அனைத்தும் வருமானமின்றி காணப்படுகிறண.

இதன் காரணத்தினால் இவர்கள் பாரிய இன்னல்களுக்கு முகங் கொடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த வாரம் முதல் உயிரியல் பூங்காக்களை மீண்டும் திறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விமலவீர திசநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த பூங்காக்களை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் திறக்கவுள்ளதாகவும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு மாத்திரமே உள் நுழைய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply