தரமின்றி காணப்பட்ட பள்ளி அதனை முற்றுகையிட்ட பொது மக்கள்!

0

பல்லடம் ஒன்றியம் ஆறுமுத்தாம்பாளயம் ஊராட்சி சேகாம் பாளையத்தில் அரசு தொடக்க பள்ளி காணப்படுகின்றது.

இதற்கமைய குறித்த பள்ளியில் கூடுதல் வகுப்பறைக்கான கட்டுமான பணி நடந்துவருகின்றது.

இந்நிலையில் குறித்த கட்டடம் தரமின்றி காணப்படுவதாக கூறி பொதுமக்கள் அனைவரும் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் கடந்த ஆண்டு ஊரடங்கு முன்பள்ளி கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டிருந்ததினால் இந்த பணிகளில் யாவும் இடை நிறுத்தப்பட்டிருந்தன.

இதனால் மூன்று மாதங்களாக சுவர்களுக்கு தண்ணீர் ஊற்ற படவில்லை இந்நிலையிலேயே சுவர்களில் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுவர்களுக்கு தண்ணீர் விடாமலேயே பணிகள் இடம்பெற்றன.

அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டு தரத்துடன் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொது மக்களின் எதிர்ப்பை தொடரந்து சுவர்களுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டு அதன்பின்னர் கட்டுமான பணிகள் தொடர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply