வரலாற்றுப் சிறப்பு மிக்க கதிர்காம கந்தனின் ஆலயத்தில் எசல பெரஹரா நிகழ்வில் கலந்துகொண்ட நடன குழுவில் 15 உறுப்பினர்களும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படுள்ளது.
இதற்கமைய குறித்த நபர்களுக்கு நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட ரப்பிட் ஆண்டிஜன் பரிசோதனையிலே தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் காலி பகுதியைச் சேர்ந்த 11 பேரும் மதறை பகுதியைச் சேர்ந்த நான்கு பேருமே இவ்வாறு தொற்றுடன் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்ட நடன கலைஞர்களை கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பவும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.