சிங்கங்களை தொடர்ந்து குரங்குகள் நான்கிற்கு கொவிட் தொற்று!

0

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் சிங்கங்களை தொடர்ந்து இரண்டு சிம்பன்சிகள் மற்றும் 2 ஓராங்குட்டான்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய மேலதிக சோதனைகளுக்கு விலங்குகளை உட்படுத்தி அதனை உறுதிப்படுத்துமாறு மிருகக்காட்சி சாலையின் அதிகாரிகளை பணித்துள்ளதாக வன ஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமல திசநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் நான்கு விலங்குகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தனக்கு தகவல் கிடைத்ததாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply