இனையைவழி கற்பித்தல் செயற்பாடு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

0

இனையைவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகியுள்ள ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ் க்கும் இடையிலான கலந்துரையாடல் நாளையதினம் இடம்பெறவுள்ளதாக ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லையெனில் எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வேதன கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் முன்னெடுத்துவரும் இணைய வழி பணிப்புறக்கணிப்பு இன்று எட்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply