மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் ஆரம்பம்- பிரதமர் மோடி!

0

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றைய தினம் தொடங்கி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி வரையில் நடைபெறும்.

இதற்கமைய டெல்லியில் கன மழை பெய்து வருவதால் நாடாளுமன்ற வளாகத்தில் குடை பிடித்த வண்ணம் பிரதமர் மோடி பேட்டி அளித்திருந்தார்.

அந்த வகையில் மழைக்கால கூட்டத்தொடரை நடத்த ஒத்துழைப்பு தேவை.

கொவிட் பெருந் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்றும்

அத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டு பாகுபலி போல வல்லவர்களாக அனைவரும் உருவாக்க வேண்டும் என அறிவித்துள்ளார்

அவ்வாறு அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு தயாராகியுள்ளது என்றும்

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடினமான கேள்விகளைக் கேட்கட்டும் ஆனால் அமைதியான முறையில் விவாதம் நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மத்திய அரசு பொருள் விளக்கத்தையும் எதிர்க்கட்சியினருக்கு கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply