நாட்டில் மேலும் 980 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 283,040 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரை 255,833 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மேலும், 3,702 பேர் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை மாகாணங்களுக்கு இடையில் பேருந்து மற்றும் புகையிரத பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக திலும் அமுனுகம அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கத