ஒரு அறையில் நீண்ட நேர சந்திப்பு – மனம் மாறிய மைத்திரி!

0

அரசாங்கத்தில் இருந்து விலகிச் செல்லும் முடிவை மைத்திரி அணி கைவிட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பின் பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த திடீர் சந்திப்பானது கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, அரசாங்கத்தில் இருந்து விலகிச் செல்லும் முடிவை மைத்திரி அணி கைவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாகிய அலரிமாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இந்த இருவரைத் தவிர வேறு எவரும் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply