தேர்தல்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து பொய்யான தகவல்களை கருத்திற் கொண்டு செயற்படும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்த தீர்மானிக்கப் பட்டுள்ளது.
இதற்கமைய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள், அரசியல் மற்றும் குறுகிய குறிக்கோள்களை இலக்கு வைத்து தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்பில் தவறான தகவல்கள் பரப்புவதற்காக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல்கள் ஆணைக்குழு நிர்வாகம் தொடர்பில் போலியான பிரச்சாரங்களை பரப்ப யாருக்கும் அனுமதி இல்லை என்றும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.