பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை!

0

பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக மன்னார் முல்லைத்தீவு வவுனியா அநுராதபுரம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் இதன் போது கடுமையாக மின்னல் தாக்கம் ஏற்பட கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நாளை பிற்பகல் 2 மணி முதல் – நாளை மறுதினம் பிற்பகல் 2 30 மணி வரையான காலப்பகுதியில் காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற் பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க கூடும்.

அவ்வாறு ஏனைய கடற்பகுதியில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் வரையும் அதிகரிக்க கூடும்.

ஆகவேபொது மக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply