ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில்இரு நபர்கள் கைது!

0

திருகோணமலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய குறித்த சந்தேகநபர்கள் திருகோணமலை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4கிராம் 900 மில்லிகிராம் அளவிலான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை துறைமுக காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply