தீவிர கண்காணிப்பின் கீழ் உள்ள வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி!

0

இரண்டு நாட்களில் யாழ் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் 48 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படுள்ளது.

இதற்கமைய குறித்த பகுதியில் இன்று அதிகாலை 4 மணி தொடக்கம் சுகாதார பிரிவு மற்றும் படையினரை கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பகுதியில் 48 பேருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் மக்கள் செறிந்து வாழும் குறித்த பகுதியை முடக்குவதற்கு சுகாதார தரப்பினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி முதல் கிராமத்துக்கான போக்குவரத்துகள் படைத்தரப்பினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் சுகாதார பிரிவின் தீவிர கண்காணிப்பின் கீழ் குறித்த பகுதி கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply