கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்!

0

கிளிநொச்சி- பளை -முல்லையடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று முல்லையடிப் பகுதியில் வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன் பொல்காவலை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply