ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் அதிரடிக் கைது!

0

திருகோணமலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய குறித்த நபர்கள் இருவரும் திருகோணமலை கடற்படையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் துறைமுக காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 4 கிராம் 900 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்படுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஹெரோயின் வேறு ஒரு நபருக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply