வாகனங்களின் அபராதத்தை செலுத்தும் புதிய முறை!

0

வாகனங்களின் அபராதத்தை மின்னணு முறையில் செலுத்துதல் மற்றும் ஓட்டுநர்களுக்கான புள்ளிகளை வழங்கும் முறையை விரைவாக அறிமுகப்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவல்துறை மா அதிபர் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த புள்ளிகள் வழங்கும் முறையை செயல்படுத்த சட்டங்கள் மற்றும் தரவு அமைப்புகள் இருக்கின்ற போதிலும் அதற்காக உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுளளார்.

மேலும் வீதிகளில் யாசகம் எடுப்பதை தடுத்து நிறுத்தவும் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply