தி.மு.க எ.ம்.பி.க்கள் கலந்துரையாடல் நாளை!

0

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எதிர்வரும் 19 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதற்கமைய குறித்த கூட்டத்தொடரில் தி.மு.க எம்பிக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் ஆலோசிப்பதற்கான கூட்டம் தி.மு.க தலைவர் மு. க ஸ்டாலின் தலைமையில் நாளைய தினம் இடம்பெறவுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு:

திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் 16ஆம் திகதி மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள முரசொலிமாறன் வளாக கூட்ட அரங்கில் நடைபெறும்.

குறித்த கூட்டத்தில் திமுக மக்களவை- மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் சமூகமளிக்க வேண்டும்.

மேலும் இந்த கூட்டத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்துவது, 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்துவது, மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்பது உள்ளிட்ட அங்க கோரிக்கைகளையும் தமிழக நலன் சார்ந்த விவகாரங்களை வலியுறுத்துவதிலும் திமுக எ.ம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து மு.க ஸ்டாலினால் ஆலோசனை வழங்கப்படவுள்ளைமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply