நாளை முதல் அடுத்த சில நாட்களுக்கு வானிலையில் மாற்றம்!

0

நாட்டின் பல பாகங்களிலும் நாளைய தினத்திலிருந்து அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாகத் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக வட மத்திய கிழக்கு மாகாணங்களிலும் மாவட்டதிலும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சப்ரகமுவ, மேல்,மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

ஆகவே இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply