எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திலிருந்து மாடு அறுப்பு தடை!

0

இலங்கையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திலிருந்து மாடு அறுப்பு தடை சட்டம் அமுலுக்கு வருவதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய தற்போது அதற்கான சட்ட வரைவு தயார் நிலையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த யோசனையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சரவைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் அதற்கான வரைபு தயாரிக்கப்பட்டு தற்சமயம் நிறைவு நிலையை அடைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்னும் இரண்டே வாரங்களில் அந்த வரைவு நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டு குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் சட்டமாக்கப் படும்.

இதன் பின்னர் இலங்கையில் மாடுகளை இறைச்சிக்காக அறுப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply