இலங்கையிலுள்ள 5 தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகளை இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சு தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளது.
இதற்கமைய குறித்த விடயம் தொடர்பான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை வலைப் பந்தாட்ட சமேளணம், இலங்கை ஜுடோ சங்கம், இலங்கை ஸ்கிரபல் சம்மேளனம், இலங்கை சர்பிங் சம்மேளனம் மற்றும் இலங்கை ஜுஜிட்சு சம்மேளனம் ஆகியவற்றின் பதிவுகளே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் குறித்த அமைப்புகளுக்கு ஜூலை 1 முதல் அமுலாகும் வகையில் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் அமல் எதிரிசூரிய உரிய அதிகாரம் பொருந்தியவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது



