கடந்த 19 வருடங்களாக தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் நடிகை திரிஷா
பரமபதம் என்ற படமே இவரது நடிப்பில் இறுதியாக வெளிவந்த படமாகும்.
அதனை தொடர்ந்து இவரது நடிப்பில் கர்ஜனை,சதுரங்க வேட்டை2, ராங்கி,சுகர், 1818 ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.
மேலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவான மிக பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதா பாத்திரதில் நடிக்கிறார் திரிஷா.
இந்நிலையில் திரிஷா தான் சைக்கிளுடன் நிற்கின்ற புகைப்படத்தை
சமூக வலைத்தலத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த சைக்கிளோடு நின்ற புகைப்படத்தை பார்த்த இரசிகர் பெருமன்றம் பெட்ரோலின் விலை 100 ரூபாயை தாண்டியதால் அதை கிண்டல் செய்யும் அதை கிண்டல் செய்யும் முகமாக இவர் சைக்கிள் புகைப்படத்தை வெளியிட்டிருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஆனால் திரிஷா “இது என்னுடைய புதிய சைக்கிள், நீங்கள் ஒரு நல்ல மனநிலையில் உங்களால் சிறந்த பயணத்தை மேற்கொள்ள முடியுமென” என குறிப்பிட்டுள்ளார்.