எதிர்வரும் நாட்களில் பெரும் போகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நெற்செய்கைக்கான விவசாய சோதனை உரத்தைத் தயாரித்து பயன்படுத்துவதற்காக விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே முன்வைத்த கருத்திற்கு அமையவே அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அத்துடன் சேதன உரத்தை தயாரிப்பதற்கு ஒரு ஹெக்டயருக்கு 12,500 ரூபா வீதம் அதிக பட்சமாக இரண்டு ஹெக்டயர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெரும் போகத்திற்கான 8 லட்சம் ஹெக்டயர் அளவில் நெற்செய்கைக் கான சேதன உரத்தைத் தயாரித்து கொள்வதற்காக கமத்தொழில் அமைச்சு இந்த வேலைத் திட்டத்தினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



