சந்திரன் ,செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகியவை இன்றும் நாளையும் வானில் நெருக்கமாக தோன்றும் அரிய நிகழ்வு நடைபெறுகிறது விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கமைய குறித்த நிகழ்வினை வெறும் வெற்றுக் கண்களால் அவதானிக்க முடியுமெனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் மேற்கு வானில் சூரியன் மறைந்த பின்னர் 45 நிமிடங்கள் கழித்து இந்த நிகழ்வினை அவதானிக்கலாம்.
அப்போது செவ்வாய் மற்றும் வெள்ளிக் கோள்களுக்கிடையே 0.5 டிக்கிரி இடைவெளிதான் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கோள்கள் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்வதையும் நாளை முதல் காண முடியும் என விஞ்ஞானிகள் அறிவித்தனர்.



