செம்பருத்தி பூவிற்கு இப்படியொரு சக்தியா?

0

இந்த செம்பருத்தி பூவை பற்றி நாம் பள்ளிக்கு செல்லும்போது படித்திருப்போம்.

குறிப்பாக இது நமது ஊர்களில் பல பேர் வீடுகளின் முன்பு இந்த செம்பருத்தி செடி வளர்ந்திருப்பதை பார்த்திருப்போம்.

அந்தவகையில் நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு இந்த பூவில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

இந்தப் பூவை நீண்ட நாட்களுக்கு முன்பு செம்பருத்தி என்ற பெயரில் தான் அழைத்து வந்தார்கள்.

அத்துடன் மலேசியாவின் தேசிய மலர் என்ற பெயரை இது கொண்டுள்ளது.

இப்படிப்பட்ட இந்த செம்பருத்தி பூ அதிகளவான மருத்துவ குணம் நிறைந்ததாக காணப்படுகிறது அதைப் பற்றி பார்ப்போம்:

இயற்கை மருத்துவத்தில் சிறந்து விளங்கும் செம்பருத்தி பூ..!!

செம்பருத்தி பூவின் சாறுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடிப் போத்தல்களில் பத்திரப்படுத்த வேண்டும்.

இந்த எண்ணெயை தினமும் தடவி வர தலைமுடி கருத்து அடர்த்தியாக வரும்.

மாதவிடாய் காலத்தில் அதிகமாக உண்டாகும் குருதி பெருக்கு 10 செம்பருத்திப் பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிட வேண்டும்.

செம்பருத்தி பூ இதழின் வடிசாறு சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் எரிச்சலைத் நீக்கும்.

நீர் சுருக்கை போக்கி சிறுநீரைப் பெருக்கி நச்சுகளை வெளியேற்றும்.

அத்துடன் இனப்பெருக்க நோய்களுக்கும் இது மருந்தாகிறது.

செம்பருத்தி பூ இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான மருந்தாக காணப்படுகின்றது.

செம்பருத்தி பூவை பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக்கொண்டு , பாலில் கலந்து காலை மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் தீரும்.

அவ்வாறு உடல் சூடு காரணமாக பலருக்கு வாய்ப்பு புண், வயிற்றுப் புண் உண்டாகும்.

அவர்கள் தினம் 10 பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் புண்கள் ஆறும் அவ்வாறு ஒரு மாத காலம் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

செம்பருத்தி பூ குளிர்ச்சி பொருந்தியது. சருமத்திற்கு இதமும் சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தப்படுத்தி உடலை பளபளப்பாக்கும்.

மேலும் செம்பருத்திப் பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்க தலைப் பேன்கள் குறையும்.

செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டைத்தூள் கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை மாலை சாப்பிட இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரித்து இரத்த சோகை நோய் குறையும்.

பி.பி இனி இல்லை குடியுங்கள் செம்பருத்தி டீ.......!

Leave a Reply