வெடிப்பு சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த நபர்.

0

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி ஐயா நகர் பிரதேசத்தில் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இதற்கமைய குறித்த வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டைனமைட் என அழைக்கப்படும் வெடி பொருளை பயன்படுத்தி மூன்று நபர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு பயன்படுத்திய குறித்த வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன் 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்த குறித்த நபரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குச்சவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply