வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய தகவல்.

0

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்களுக்கு தனிமைப்படுத்தல் இலவசத் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தியுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்றைய நாடாளுமன்றத்தின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர் துஷார இந்துனில் வெளிநாடுகளில் பல்வேறு காரணத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் பணியாளர்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்பவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவது தொடர்பில் கூறும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வெளிநாட்டு பணியாளர்கள் நாட்டிற்கு வருகை தரும்போது அவர்கள்

கொவிட் சட்டத்தின் பிரகாரம் தனிமைப் படுத்துவதற்காக ஹோட்டல்கள் மற்றும் வேறு தங்குமிட நிலையங்களாக 14 மத்திய நிலையங்கள் இவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply