மற்றுமொரு புதிய வைரஸ் தொற்றா?- இலங்கை பெரும் ஆபத்தில்.

0

தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் வேகமாக பரவி வரும் டெல்டா வைரஸ் திரிபை விட மிகப் பாரிய அளவிலான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய புதிய கொரோனா வைரஸ் திரிபு பெரு நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட புதிய வைரஸ் திரிபுக்கு லெம்டா என பெயரிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த புதிய வகை வைரஸ் தொற்று பிரித்தானியா உள்ளிட்ட 30 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் குறித்த வைரஸ் தொடர்பான ஆய்வுகளை சர்வதேச சுகாதார நிபுணர்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply