நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த கெட்ட கொட்ட பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த பரிந்துரை அடங்கிய ஆவணங்கள் தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னதாக ஜயந்த கெட்ட கொட்ட தமது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply