சிறுவர் இல்லம் ஒன்றில் 45 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய நுவரலிய மாவட்டத்திலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றிலே இந்த தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய குறித்த சிறுவர் இல்லத்திலே 8 சிறார்களுக்கு ஏற்கனவே கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.
இந்நிலையில் அங்கு மொத்தமாக 37 சிறர்களுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன் அந்த சிறுவர் இல்லத்தில் 8 நிர்வாக அதிகாரிகளுக்கும் கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.
அவ்வாறு கொட்டகலை பொது சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் மேலும் 25 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடந்த காலங்களில் 119 பேருக்கு பி. சி. ஆர் எடுக்கப்பட்டதாகவும் அதில் 25 பேருக்கு தொற்று உறுதியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



