நாட்டில் கொவிட் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் மேலும் 32 மரணங்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.
இதற்கமைய இவ்வாறு மரணித்தவர்களில் 14ஆண்களும் 18 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை காலமும் கொவிட் தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 3,268 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



